Tuesday 8 February 2011

ஆலயம் வழிபாடு அவசியம்


ஆலயம் வெறும் பிரார்த்தனை கூடம் அல்ல,அது பரம்பொருளில் சக்தி வெளிப்பட்டு நிற்கும் இடம். பசுவின் உடல் முழுதும் பால் பரவியிருந்தாலும்
மடியின் வழியாகத்தான் பால் வெளிப்படுகிறது.அது போல் இறைவன் எல்லா இடங்களிலும் சர்வ வியாபியாக பரவிஇருந்தாலும்,அவன் வெளிப்பட்டு நிற்கும் இடம் ஆலயம் ஆகும்.எனவே வீட்டில் செய்யும் வழிபாட்டுடன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது அவசியமாகிறது.எல்லா நாட்களிலும் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொள்ளவேண்டும்.இயலாதவர்கள்,வாரத்தில் ஒருநாள் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.வாராந்திர,மாதாந்திர வருஷானந்திர திருவிழாக்களுக்கு கட்டாயம் சென்று வழிபடவேண்டும்.
திருவிழா காலங்களில் ஆலய வழிபாடு செய்தால் இறைவனின் சாகம்பர நோக்கு (பார்வையால் தீட்சை )கிடைக்கும் என்கின்றன ஆகமங்கள்

No comments:

Post a Comment